அல்லாமா இக்பால் புலமைப் பரிசு தேர்வு முடிவுகள் ஆகஸ்டில்!

Date:

பாகிஸ்தான் அரசால் வழங்கப்படும் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் தேர்வின் முடிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம், அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்திற்கான தேர்வுப் பரீட்சையினை கடந்த மே மாதம் 29ம் திகதி முதல் ஜூன் 4 வரை இலங்கையில் நடத்தியது.

புத்தளம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் நாடளாவிய ரீதியில் இருந்து மாணவர்கள் இத்தேர்வில் கலந்துகொண்டனர்.

இத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும். மேலும், தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உயர் கல்வி ஆணையத்தின் தலைவரினால் வழங்கப்படும்.

பாடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைப் பொறுத்து, கல்வி நடவடிக்கைகள் இவ்வருட ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும்.

பல்வேறு இனங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Popular

More like this
Related

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...