இந்திய பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருதான’ஆர்டர்ஆஃப் தி நைல்’விருது!

Date:

பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நை ல்’ விருது வழங்கப்பட்டது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி, அதிபர் அப்தெ ல் ஃபத்தா அல்-சிசி சந்திப்பு நடைபெற்றது.

கெய்ரோ அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி வாயிலுக்கு வந்து வரவேற்றா ர்.

பிரதமர் மோடி, அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இடையேயான சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

எகிப்து அரசின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதிபர் அப்தெ ல் ஃபத்தா அல்-சி சி விருதை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக இன்று காலை ஹெலியோ பொலிஸ் போர் நினைவுச் சின்னத்திற்கு
சென்ற பிரதமர், முதலாம் உலகப்போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
செலுத்தினார்.

கெய்ரோவில் உள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான அல்-ஹக்கீம் மசூதி யையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்தியாவிலுள்ள தாவூதி போரா சமூகத்தவரின் நிதி உதவியுடன் அல்-ஹக்கீம் மசூதி அண்மையில் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...