எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு: ஆலோசனைக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர்

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெறுவதற்காக சிங்கப்பூரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இழப்பீடு வழக்கை ஆராய்வதற்காக சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு உதவ ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர ஆகியோரே அவர்கள்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் இவர்கள் நியமிக்கப்பட்டதாக அதன் தலைவர் சட்டத்தரணி அசேல ரெக்கவ தெரிவித்தார்.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் ஊடாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஆதரவை இந்த வழக்கிற்கு வழங்குவதாகவும் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...