கண்டி எனசல் மத்திய கல்லூரியில் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.
இந்த கருத்தரங்கை கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் பேராதனை பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸுடன் இணைந்து நடாத்தினர்.
கல்லூரி அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கின் விரிவுரைகளை பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்கள் நடாத்தினர்.
இறுதியில் கருத்தரங்கின் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.