கின்னஸ் சாதனை படைக்க களமிறங்கும் விமானப்படை வீரர்!

Date:

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த, இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட வீரர் கோப்ரலாக ரொஷான் அபேசுந்தர, கின்னல் உலக சாதனை படைப்பதற்காக தயாராகி வருகின்றார்.

குறித்த நிகழ்வு, நாளை காலை 6 மணிக்கு கல்கிசை கடற்பகுதியில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு , உலக கடல் தினத்தை முன்னிட்டு ‘பிளாஸ்டிக் வேண்டாம் என்று கூறுங்கள்“ என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ளமையும் விசேட அம்சமாகும்.

இதன்போது, கோப்ரலாக ரொஷான் அபேசுந்தர விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100 கிலோகிராம் எடையுடைய பிளாஸ்டிக் மூடையை முதுகில் கட்டி இழுத்து கொண்டே நீந்திச் செல்லவுள்ளார்.

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர கடந்த2021ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனையை நிலைநாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் குறித்த நீச்சல் சாதனையை முறியடித்து வெற்றி ஒருவன் செய்தி பிரிவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...