குருநாகலில் இடம்பெற்ற பெண்கள் மற்றும் சமூகத் தலைவர்களுக்கான தலைமைத்துவம் குறித்த பயிற்சி செயலமர்வு!

Date:

பெண் அரசியல் தலைமைத்துவம் மற்றும் சமூகத் தலைவர்களுக்கான தலைமைத்துவம் குறித்த இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு கடந்த மே மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் குருநாகலிலுள்ள புளூ ஸ்கை ஹோட்டலில் நடைபெற்றது.

NPC இன் PACT செயற்றிட்டத்துடன் இணைந்து குருநாகல் மாவட்டத்திற்கான இலங்கை தேசிய சமாதான பேரவை இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த பயிற்சி செயலமர்வில் மொத்தமாக 37 பேர் பங்கேற்றிருந்ததுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட 29 வேட்பாளர்களும் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் இதில் சமூகத் தலைவர்கள் 8 பேரும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, பொதுஜன பெரமுன கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் பங்கேற்றனர்.

இச் செயலமர்வில், திரு.தர்மசிறி மற்றும் திரு.வீரசிங்கம் ஆகியோர் வளவாளர்களாக பயிற்சி செயலமர்வை முன்னெடுத்ததுடன், திரு.தர்மசிறி உள்ளுராட்சி சட்டம் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்துடன் திரு. வீரசிங்கம் தலைமைத்துவம் பற்றிய உண்மைகளை தெளிவுபடுத்தினார்கள்.

பாலின அடிப்படையிலான தலைமைத்துவத்திற்கான தடைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளித்து முன்னேறுவது என்பது பற்றியும் இதன்போது அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...