குருநாகலில் இடம்பெற்ற பெண்கள் மற்றும் சமூகத் தலைவர்களுக்கான தலைமைத்துவம் குறித்த பயிற்சி செயலமர்வு!

Date:

பெண் அரசியல் தலைமைத்துவம் மற்றும் சமூகத் தலைவர்களுக்கான தலைமைத்துவம் குறித்த இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு கடந்த மே மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் குருநாகலிலுள்ள புளூ ஸ்கை ஹோட்டலில் நடைபெற்றது.

NPC இன் PACT செயற்றிட்டத்துடன் இணைந்து குருநாகல் மாவட்டத்திற்கான இலங்கை தேசிய சமாதான பேரவை இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த பயிற்சி செயலமர்வில் மொத்தமாக 37 பேர் பங்கேற்றிருந்ததுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட 29 வேட்பாளர்களும் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் இதில் சமூகத் தலைவர்கள் 8 பேரும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, பொதுஜன பெரமுன கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் பங்கேற்றனர்.

இச் செயலமர்வில், திரு.தர்மசிறி மற்றும் திரு.வீரசிங்கம் ஆகியோர் வளவாளர்களாக பயிற்சி செயலமர்வை முன்னெடுத்ததுடன், திரு.தர்மசிறி உள்ளுராட்சி சட்டம் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்துடன் திரு. வீரசிங்கம் தலைமைத்துவம் பற்றிய உண்மைகளை தெளிவுபடுத்தினார்கள்.

பாலின அடிப்படையிலான தலைமைத்துவத்திற்கான தடைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளித்து முன்னேறுவது என்பது பற்றியும் இதன்போது அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...