கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆரம்பமாகியிருந்தது.

வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப மஹாபொல உதவித்தொகை அதிகரிக்க வேண்டும், தாமதமான மஹாபொல உதவித்தொகை வழங்கப்பட வேண்டும், ஐந்து மாதங்களாக சிறையில் இருக்கும் மாணவர் செயற்பாட்டாளர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் பேரணியானது கொழும்பை சென்றடைய தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் கொழும்பில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பெறப்பட்ட தடை உத்தரவு காரணமாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பேரணியின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

இந்து போராட்டம் காரணமாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கலகத்தடுப்பு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...