சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி பதவி விலகினார்

Date:

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.

குறித்த மாகாணங்களின் முன்னையை ஆளுநர்களை ஜனாதிபதி பதவி விலக்கியதன் பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றது.

அதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...