சீமெந்து, கொங்கிரீட் இரும்பு கம்பிகளின் விலை குறைவடையும்!

Date:

அடுத்த சில நாட்களில் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மற்றும் கொங்கிரீட் இரும்பு கம்பிகளின் விலை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அனைத்து சங்கங்களுடனும் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் உற்பத்தி நிறுவனங்களிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூலப்பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் துறையில் சரிவு ஏற்பட்டிருப்பது இதன் போது தெரியவந்துள்ளது.

“எனவே, சிமெந்து உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடைக்கு, குறைந்தபட்சம், 300 ரூபா முதல், 500 ரூபா வரை, விரைவில் விலையை குறைக்கச் சொன்னேன்.

இந்த விலைக் குறைப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நடைமுறைக்கு வரும் என அமைச்சு நம்புகிறது”

கொங்கிரீட் இரும்பு கம்பிகளின் விலையையும் குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...