கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை இரவு 7 மணி வரை அமுலில் இருக்கும்.
மேலும், நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் சீதாவக பிரதேச செயலகப் பிரிவு, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவு, கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, கிரியெல்ல, எஹெலியகொட, எல்ஹெலியகொட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு 1ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, பெல்மடுல்ல மற்றும் அயகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.