ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் தீவிரவாத விரிவுரைகள் மற்றும் ஆயுதப் பயிற்சிகளில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் நான்கு வருடங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முன் ஆயத்தமாக, ஹம்பாந்தோட்டை செட்டிகுளம் பகுதியில் மொஹமட் சஹ்ரான் நடத்திய தீவிரவாத விரிவுரை மற்றும் ஆயுதப் பயிற்சி முகாமில் பங்கேற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் கணனி பாடநெறியில் கல்வி கற்கும் கம்பளை வெலம்படையைச் சேர்ந்த அஜ்மல் சஹீர் அப்துல்லா என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.