நாளை மறுதினம் முதல் கடவுச்சீட்டை இணையத்தளம் வழியாக பெறலாம்

Date:

கடவுச்சீட்டுக்களை இணையத்தளம் வழியாக வழங்கும் முறைமை நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், எவருக்காவது அவசியமாக இருந்தால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வந்தும் விண்ணப்பத்தை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு நாளில் கடவுச்சீட்டை வழங்கும் சேவை வழமைப்போல் நடைபெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்ப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த பின்னர், மூன்று தினங்களுக்குள் விண்ணப்பதாரியின் வீட்டுக்கு கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...