பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுளா பெர்னாண்டோ நியமனம்

Date:

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCS) புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி வெற்றிடத்திற்கு நிதியமைச்சராக பேராசிரியர் பெயர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்டது.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஜனக ரத்நாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளால் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...