மாணவர்கள் செய்த சேதத்திற்கு பெற்றோருக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு!

Date:

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர், பாடசாலையின் சொத்துக்களுக்கு தாம் ஏற்படுத்திய சேதங்களுக்கு  பெற்றோர் நஷ்டஈடு வழங்குவதாக பாடசாலை அதிபர் முன்னிலையில் மாணவர் குழுவொன்று உறுதியளித்துள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மூலம் பாடசாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாணவர்கள் ஆறு பேர் மற்றும் அவர்களது பெற்றோர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரிக்கப்பட்டதாகவும் ஏற்பட்ட சேதத்தை மீளப் பெற்றுத்தருவதாக பெற்றோர் உறுதியளித்ததாகவும் மனம்பிட்டிய பொலிஸ் நிலையப் பரிசோதகர் அசேல சரத் குமார தெரிவித்தார்.

மாணவர்களால் அழிக்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் அனைத்தையும் மீட்டுத்தருமாறு பெற்றோர்களுக்கு மனம்பிட்டி பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அதற்கு இணங்கியுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி சாதாரணத் தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததையடுத்து குறித்த பாடசாலையின் ஆறு மாணவர்களைக் கொண்ட குழுவினர் பாடசாலையின் உபகரணங்கள், மின் விசிறிகள், மலசலகூட கதவுகளை சேதப்படுத்தியமை தொடர்பில் மனம்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...