ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சு பதவிகளை வழங்குமாறு பரிந்துரைத்துள்ள சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
தனிப்பட்ட ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் இதனை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எஸ்.பி.திஸாநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, சனத் நிஷாந்த, காமினி லொக்குகே ஆகிய சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்தின் உயர் மட்ட அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் இதனை அறிவித்துள்ளதாக பேசப்படுகிறது.
உடனடியாக அமைச்சு பதவிகளை வழங்க முடியாவிட்டாலும் அவர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.