வார இறுதி நாட்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்

Date:

இந்த வார இறுதியில் பாடசாலைகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நேற்று முடிவடைந்த நிலையில், பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலை நிர்வாகங்களின் ஆதரவுடன், பாடசாலைகளுக்கு அருகாமையில் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபை அதிகாரிகளின் பங்களிப்புடன் கொழும்பு நகர எல்லைக்குள் விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவில் பதிவாகியுள்ளனர்.

கடந்த பல வாரங்களாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இவ்வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,000 கடந்துள்ளது.

ஐந்து மாதங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

Popular

More like this
Related

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...

ஷானி உள்ளிட்ட 3 பேரின் மனுக்களை விசாரிக்க அனுமதி!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ்...

பொல்கஹவெல அல் இர்பானில் ஊடகக் கழகம் ஆரம்பம்

பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து...

மின்சார கட்டண திருத்தம்: பொது மக்களின் ஆலோசனைகள் இன்றுடன் நிறைவு!

இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த...