ஹஜ் யாத்திரிகர்களுக்கான சிறப்பு ரயில் சேவையை இயக்கியது சவூதி

Date:

சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் சேவைகளை இயக்கியுள்ளது.

மினா, அராஃபத் மற்றும் முஸ்தலிஃபா இடையே யாத்திரிகர்களை ஏற்றிச் செல்லும் அல் மஷாயர் மெட்ரோ லைன், தற்போதைய ஹஜ் பருவத்திற்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்களை ஏற்றிச் செல்ல தயாராக உள்ளது.

இந்த மெட்ரோ  ரயில் 18 கிலோமீட்டர் பயணிப்பதுடன் இந்த ரயில் பாதையில் ஒன்பது ரயில்  நிலையங்கள் உள்ளன, இதில் மினா, அராபத் மற்றும் முஸ்தலிஃபாவில் தலா மூன்று உள்ளன.

இந்த பாதையின் கடைசி நிலையம் ஜமாரத் பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ஒரு மெட்ரோ ரயில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது மற்றும் மினாவில் இருந்து அராஃபத்திற்கு பயணிக்க 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

அல் மஷாயர் மெட்ரோ லைனில் 17 ரயில்கள் உள்ளன, அவை புனித தலங்களுக்கு சேவை செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஒரு ரயிலில் 3,000 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

இதன்மூலம் புனிதத் தலங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கலாம். சாலைகளில் நெரிசல் குறையும். மேலும், யாத்திரிகர்களும் தாங்கள் போக வேண்டிய புனிதத் தலத்திற்கு விரைவாக போக முடியும்.

அல் மஷார் மெட்ரோ ரயில் கடந்த 15 ஆண்டுகளில் யாத்திரிகர்களுக்கு சேவை செய்வதற்காக சவூதி அரேபியாவால் செயல்படுத்தப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்றாகும்.

Popular

More like this
Related

பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு...

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...