ஹஜ் யாத்திரிகர்களுக்கான சிறப்பு ரயில் சேவையை இயக்கியது சவூதி

Date:

சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் சேவைகளை இயக்கியுள்ளது.

மினா, அராஃபத் மற்றும் முஸ்தலிஃபா இடையே யாத்திரிகர்களை ஏற்றிச் செல்லும் அல் மஷாயர் மெட்ரோ லைன், தற்போதைய ஹஜ் பருவத்திற்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்களை ஏற்றிச் செல்ல தயாராக உள்ளது.

இந்த மெட்ரோ  ரயில் 18 கிலோமீட்டர் பயணிப்பதுடன் இந்த ரயில் பாதையில் ஒன்பது ரயில்  நிலையங்கள் உள்ளன, இதில் மினா, அராபத் மற்றும் முஸ்தலிஃபாவில் தலா மூன்று உள்ளன.

இந்த பாதையின் கடைசி நிலையம் ஜமாரத் பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ஒரு மெட்ரோ ரயில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது மற்றும் மினாவில் இருந்து அராஃபத்திற்கு பயணிக்க 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

அல் மஷாயர் மெட்ரோ லைனில் 17 ரயில்கள் உள்ளன, அவை புனித தலங்களுக்கு சேவை செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஒரு ரயிலில் 3,000 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

இதன்மூலம் புனிதத் தலங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கலாம். சாலைகளில் நெரிசல் குறையும். மேலும், யாத்திரிகர்களும் தாங்கள் போக வேண்டிய புனிதத் தலத்திற்கு விரைவாக போக முடியும்.

அல் மஷார் மெட்ரோ ரயில் கடந்த 15 ஆண்டுகளில் யாத்திரிகர்களுக்கு சேவை செய்வதற்காக சவூதி அரேபியாவால் செயல்படுத்தப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்றாகும்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...