19ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ!

Date:

இலங்கை விமானப்படையின் 19ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார்.

இது தொடர்பான நிகழ்வு நாளை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, 18ஆவது விமானப்படைத் தளபதியாக மூன்று வருடங்களுக்கு மேலாக பதவி வகித்த எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நாளையுடன் சேவையிலிருந்து விலகவுள்ளார்.

57 வயதான எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவராவார்.

1985 ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்து 38 வருடங்கள் பல விருதுகளையும் பதவி உயர்வுகளையும் பெற்று ஏர் மார்ஷல் பதவியை அடைந்தார்.

புதிய விமானப்படை தளபதியாக நியமிக்கப்படவுள்ள எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, 2022 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

1

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...