இந்திய பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருதான’ஆர்டர்ஆஃப் தி நைல்’விருது!

Date:

பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நை ல்’ விருது வழங்கப்பட்டது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி, அதிபர் அப்தெ ல் ஃபத்தா அல்-சிசி சந்திப்பு நடைபெற்றது.

கெய்ரோ அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி வாயிலுக்கு வந்து வரவேற்றா ர்.

பிரதமர் மோடி, அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இடையேயான சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

எகிப்து அரசின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதிபர் அப்தெ ல் ஃபத்தா அல்-சி சி விருதை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக இன்று காலை ஹெலியோ பொலிஸ் போர் நினைவுச் சின்னத்திற்கு
சென்ற பிரதமர், முதலாம் உலகப்போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
செலுத்தினார்.

கெய்ரோவில் உள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான அல்-ஹக்கீம் மசூதி யையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்தியாவிலுள்ள தாவூதி போரா சமூகத்தவரின் நிதி உதவியுடன் அல்-ஹக்கீம் மசூதி அண்மையில் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...