‘உள்ளூர் முட்டைகளை 44 ரூபாவுக்கு வழங்க முடியும்’

Date:

சதொசவின் ஊடாக உற்பத்தி பொருட்களை வழங்க முடியுமெனின், உள்ளூர் முட்டைகளை 44 ரூபா தொடக்கம் 46 ரூபா வரை உத்தரவாதத்துடன் வழங்க முடியும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடி கோழி உற்பத்தி தொடர்பில் எமது உற்பத்தி செலவுகளை அவர்களுக்கு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, சுமார் 1600 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியை 1400 ரூபாவாக குறைக்க முடிந்ததாக தெரிவித்தார்.

முக்கியமான கால்நடை தீவனப் பொருளான சோளம் தட்டுப்பாடடைந்த காரணத்தினால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவ்வாறான நிலைமைகளில் 95 வீதமான சோளத்தை வெளிநாட்டு விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...