எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீடு: ஆலோசனைக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர்

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெறுவதற்காக சிங்கப்பூரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இழப்பீடு வழக்கை ஆராய்வதற்காக சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு உதவ ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர ஆகியோரே அவர்கள்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் இவர்கள் நியமிக்கப்பட்டதாக அதன் தலைவர் சட்டத்தரணி அசேல ரெக்கவ தெரிவித்தார்.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் ஊடாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஆதரவை இந்த வழக்கிற்கு வழங்குவதாகவும் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...