ஒரு நாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணம் குறைப்பு

Date:

ஒரு நாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு நாள் சேவை மூலம் கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் 20,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்ட நிலையில் தற்போது அதனை 15,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக குடிவரவு , குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறையில் அதனை குறைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புதிய திட்டத்தின் கீழ், ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்போர் வழமையான முறையில் 14 நாட்களுக்குள் தமக்கான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஒன்லைன் மூலம் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...