கின்னஸ் சாதனை படைக்க களமிறங்கும் விமானப்படை வீரர்!

Date:

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த, இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட வீரர் கோப்ரலாக ரொஷான் அபேசுந்தர, கின்னல் உலக சாதனை படைப்பதற்காக தயாராகி வருகின்றார்.

குறித்த நிகழ்வு, நாளை காலை 6 மணிக்கு கல்கிசை கடற்பகுதியில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு , உலக கடல் தினத்தை முன்னிட்டு ‘பிளாஸ்டிக் வேண்டாம் என்று கூறுங்கள்“ என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ளமையும் விசேட அம்சமாகும்.

இதன்போது, கோப்ரலாக ரொஷான் அபேசுந்தர விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100 கிலோகிராம் எடையுடைய பிளாஸ்டிக் மூடையை முதுகில் கட்டி இழுத்து கொண்டே நீந்திச் செல்லவுள்ளார்.

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர கடந்த2021ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனையை நிலைநாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் குறித்த நீச்சல் சாதனையை முறியடித்து வெற்றி ஒருவன் செய்தி பிரிவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...