கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆரம்பமாகியிருந்தது.

வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப மஹாபொல உதவித்தொகை அதிகரிக்க வேண்டும், தாமதமான மஹாபொல உதவித்தொகை வழங்கப்பட வேண்டும், ஐந்து மாதங்களாக சிறையில் இருக்கும் மாணவர் செயற்பாட்டாளர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் பேரணியானது கொழும்பை சென்றடைய தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் கொழும்பில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பெறப்பட்ட தடை உத்தரவு காரணமாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பேரணியின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

இந்து போராட்டம் காரணமாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கலகத்தடுப்பு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...