டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டம்!

Date:

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பகுதிகளுக்கு விசேட குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களினால் சில பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 409 ஆகும்.

இந்த நிலையில் நிறுவன சுற்றுச்சூழலை துப்புரவு செய்வதற்காக இன்று(2) வௌ்ளிக்கிழமை காலை 2 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...