தேசிய பாடசாலைகளை மேற்பார்வையிட குழு: கல்வி அமைச்சு தீர்மானம்

Date:

தேசிய பாடசாலைகளை மேற்பார்வையிட கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை கொண்ட குழுவொன்றை உருவாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

முறையான ஒழுங்குமுறை முறையைப் பின்பற்றி இந்தப் பாடசாலைகளை வழமையான நிலைக்குக் கொண்டுவருவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (11) தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகள் தொடர்பில் முறையான கண்காணிப்பு செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், அமைச்சின் தேசிய பாடசாலை பிரிவும் மாகாண கல்வி அமைச்சும் இணைந்து இந்த அணியை நியமிக்கவுள்ளது.

சில தேசிய பாடசாலைகளின் செயற்பாடுகள் பல வருடங்களாக கண்காணிக்கப்படவில்லை எனவும், சில தேசிய பாடசாலைகள் பெயருக்கு மாத்திரம் இயங்கும் நிலை காணப்படுவதால் அதற்கான தேவை குறைந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...