தேசிய பாடசாலைகளை மேற்பார்வையிட குழு: கல்வி அமைச்சு தீர்மானம்

Date:

தேசிய பாடசாலைகளை மேற்பார்வையிட கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை கொண்ட குழுவொன்றை உருவாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

முறையான ஒழுங்குமுறை முறையைப் பின்பற்றி இந்தப் பாடசாலைகளை வழமையான நிலைக்குக் கொண்டுவருவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (11) தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகள் தொடர்பில் முறையான கண்காணிப்பு செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், அமைச்சின் தேசிய பாடசாலை பிரிவும் மாகாண கல்வி அமைச்சும் இணைந்து இந்த அணியை நியமிக்கவுள்ளது.

சில தேசிய பாடசாலைகளின் செயற்பாடுகள் பல வருடங்களாக கண்காணிக்கப்படவில்லை எனவும், சில தேசிய பாடசாலைகள் பெயருக்கு மாத்திரம் இயங்கும் நிலை காணப்படுவதால் அதற்கான தேவை குறைந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...