நடாஷாவுக்கு முன்னர் ஞானசார தேரரை கைது செய்யுங்கள்: சந்திரிக்கா

Date:

நடாஷா எதிரிசூரிய பௌத்த சமயத்தை அவமதித்தார் என்று கைது செய்வதற்கு முன்னர் இஸ்லாம் சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய, கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களை தீ வைத்த ஞானசார தேரர் போன்றவர்களுக்கு எதிராக எடுக்க போகும் நடவடிக்கை என்ன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று அதிகாலை டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, இலங்கை பௌத்தர்கள் உண்மையான பௌத்த விழுமியங்களுக்கு அமைய வாழ்ந்திருந்தால், தற்போது நாடு இந்தளவுக்கான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்காது என கூறியுள்ளார்.

வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதில், நடாஷாவை விட ஞானசார தேரர், விஷமத்தானமான அழுத்தங்களை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

பௌத்த மதத்திற்கான முழுமையான கௌரவத்தை வழங்க வேண்டும் என்பதை தானும் ஏற்றுக்கொள்வதாகவும் அத்துடன் ஏனைய மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் எனவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் தமது நம்பிக்கை மற்றும் மதத்தை பின்பற்றும் உரிமை இருக்க வேண்டும்.

பௌத்தர்கள் என்ற வகையில் கருணை, இரக்கம் மற்றும் அக்கறை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தி கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டு தற்போது அண்மையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகபேறு பிரிவின் மருத்துவர் சாஃபி தொடர்பாக நாடு முழுவதும் தவறான செய்திகளை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த நடவடிக்கையை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் தாமதமாகவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...