நாளை மறுதினம் முதல் கடவுச்சீட்டை இணையத்தளம் வழியாக பெறலாம்

Date:

கடவுச்சீட்டுக்களை இணையத்தளம் வழியாக வழங்கும் முறைமை நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், எவருக்காவது அவசியமாக இருந்தால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வந்தும் விண்ணப்பத்தை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு நாளில் கடவுச்சீட்டை வழங்கும் சேவை வழமைப்போல் நடைபெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்ப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த பின்னர், மூன்று தினங்களுக்குள் விண்ணப்பதாரியின் வீட்டுக்கு கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...