பாடசாலை அதிபரை ஹஜ் கடமையை நிறைவேற்ற வழியனுப்பி வைத்த பாடசாலைச் சமூகம்!

Date:

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக்  புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக அப்பாடசாலையின்  பழைய மாணவர் சங்கத்தினர் (200,000/=) இரண்டு இலட்சம் ரூபா பணத்தை அன்பளிப்பு செய்தனர்.

நாளை 13 ஆம் திகதி பயணமாகவுள்ள அதிபரை  வழியனுப்பும்  நிகழ்வு இன்று (12) பாடசாலையில் சங்கத்தின்  ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதேவேளை கடையாமோட்டை தேசிய பாடசாலையில் விஞ்ஞான துறையை ஆரம்பித்து பல மாணவர்களை வைத்திய துறைக்கும், விஞ்ஞான பட்டதாரிகளையும் உருவாக்கிய ஓய்வு பெற்றுச் சென்ற ஏ.எஸ்.எம். மாஹிர் ஆசிரியரை கௌரவிக்கும் முகமாக  SCIENCE FORUM, SCIENCE UNION ஆகியோர் இணைந்து 100,000/= ரூபா காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எச்.எம்.ஹாரூன் உட்பட அதன் உறுப்பினர்கள், பாடசாலை கல்வி அபிவிருத்திக் குழு தலைவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ் அதன் செயலாளர் சீ.எம். தாவூத் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.எம்.ஜெஸீர் , ஆசிரியர்கள் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வுகள் யாவும் மதியபோசணத்துடன் நிறைவு பெற்றது. இதேவேளை கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதால் பதில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஏ. அஷ்ரப் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...