போதைப்பொருள் ஒழிப்பு: நாடுதழுவிய சோதனை நடவடிக்கை!

Date:

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தடுப்பு சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் விசேட சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 255 கொலைகள் நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 34 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இதில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சம்பவங்களும் அடங்கும். கடந்த ஆண்டு 60 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த வருடம் இடம்பெற்ற அதேயளவிலான கொலைகள் இந்த வருடமும் பதிவாகக் கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...