போர் காலத்தில் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் கூடியதில்லை-ஹரினி அமரசூரிய

Date:

நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

போர் காலத்தில் கூட வார இறுதி நாட்களில் கூட நாடாளுமன்றத்தை அவசரமாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டியுள்ளனர்.

மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாது, ஒரு நபரின் தேவைக்கு அமைந்து இது நடக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது.

அவசரமாக வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் எப்போதும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதில்லை.

வரவு செலவுத்திட்டம் விவாதங்களில் போது, மிக அரிதாக சனிக்கிழமை நாடாளுமன்றம் கூடும். பிரித்தானிய நாடாளுமன்றம் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் கூடியதில்லை.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தி மக்களின் வறுமையை அதிகரித்து வருகிறது.

மக்களின் பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பை வழங்கிய சமூக நிவாரணங்களையும் அரசாங்கம் படிப்படியாக இல்லாமல் ஆக்கி வருகிறது எனவும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...