இலங்கை ரக்பி தாக்கல் செய்த ரிட் மனு ஜூலை 25ஆம் திகதி விசாரணைக்கு!

Date:

விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை ரக்பி (SLR) மற்றும் அதன் தலைவர் ரிஸ்லி இல்யாஸ் ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனு ஜூலை 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரும் SLR தலைவருமான ரிஸ்லி இல்யாஸ் தாக்கல் செய்த மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றைய தினம் விசாரிக்கவுள்ளது.

ஜூலை 14 அன்று, இலங்கை ரக்பியின் நிர்வாகம் மற்றும் விவகாரங்களில் விளையாட்டு அதிகாரிகள் தலையிடுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த இடைக்கால உத்தரவு ரிட் மனுவின் இறுதி முடிவு வரை அமுலில் இருக்கும்.

இலங்கை ரக்பி மற்றும் அதன் தலைவர் ரிஸ்லி இல்யாஸ் இலங்கை ரக்பியின் செயற்பாடுகளை இடைநிறுத்தி விளையாட்டு அமைச்சரால் வெளியிடப்பட்ட 11.04.2023 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து மனுதாரர்களான இலங்கை ரக்பி (SLR), SLR தலைவர் ரிஸ்லி இல்யாஸ் மற்றும் SLR இன் ஏனைய ஏழு அலுவலக பணியாளர்கள் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

மனுதாரர்கள் சார்பாக கலாநிதி பைஸ் முஸ்தபா பி.சி., சட்டத்தரணி கீர்த்தி திலகரத்ன, சட்டத்தரணி பண்டுக கீர்த்தினாந்த ஆகியோர் ஆஜராகினர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் சிரேஷ்ட மேலதிக சட்டத்தரணி சுமதி தர்மரத்ன ஆஜராகியிருந்தார். உதித இகலஹேவா பி.சி., 4 முதல் 12 வது பிரதிவாதிகளுக்காக ஆஜரானார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...