உயர்தரத்திற்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டி பரீட்சை!

Date:

உயர்தரத்தின் சில பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, உயர்தரத்தின் கணிதம், விஞ்ஞானம், சர்வதேச மொழிகள், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்காக ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதன்படி மாகாண மட்டத்தில் 5450 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு அமைவாக 35 வயதுக்கு குறைவான, தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த போட்டிப் பரீட்சைக்காக எதிர்வரும் சில வாரங்களில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...