ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவிற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு!

Date:

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(04) அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி சமூக மற்றும் கலாசாரத்திற்கான மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று(04) காலை 10.30க்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஊடக அடக்குமுறையின் மற்றுமொரு நடவடிக்கையாக தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் அழைக்கப்படுவது இது மூன்றாவது தடவை என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...