ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

Date:

இந்த சட்டமூலம் தொடர்பில் 196 திருத்தங்கள் ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்றும் இன்றுமென இரண்டு நாட்கள் நடைபெற்றது. சட்டமூலம் மூன்றாம் வாசிப்பின் பின்னரே வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தின் இருபத்தெட்டு பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அண்மையில் சபாநாயகரிடம் தெரிவித்தது. அதன்படி, அரசியலமைப்புக்கு எதிரான சரத்துகள் திருத்தப்பட்டுள்ளன.

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரகாரம் ஜனாதிபதி, உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களும் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், ஊழல் மோசடிகள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களின் உரிமைகள் புதிய சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...