சர்வதேச நாணய நிதியத்தின் 2ஆம் கட்ட கடன் செப்டெம்பரில் கிடைக்கும்!

Date:

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் விரைவான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதால் எதிர்வரும் செப்டெம்பரில் இரண்டாம் கட்ட கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடாக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

”சர்வதேச நாயண நிதியத்தின் முதல் தவணை கடன் மாத்திரமே இலங்கைக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளது.

அடுத்தகட்ட தவணை கடன்களை பெற்றுக்கொள்ள பல நிபந்தனைகளை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. என்றாலும், அவர்கள் வழங்கியுள்ள பல்வேறு நிபந்தனைகளை நாம் தற்போது நிறைவேற்றியுள்ளோம்.

வரி மறுசீரமைப்பு என்பது இதில் பிரதானமான ஒன்றாகும். வரி மறுசீரமைப்பின் ஊடாக அரச வருவாய் அதிகரித்துள்ளதுடன், நட்டமீட்டும் பல்வேறு அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைப்பதற்கான பொறிமுறைகளையும் உருவாக்கியுள்ளோம்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...