தென் மாகாணத்தில் சில இடங்களின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை, அஹூங்கல்ல, மீட்டியாகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் தொடர்ந்தும் நடக்கும் கொலை சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் கடற்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதுடன் கொலைகளும் அதிகரித்துள்ளன.