சில பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

Date:

தென் மாகாணத்தில் சில இடங்களின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை, அஹூங்கல்ல, மீட்டியாகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் தொடர்ந்தும் நடக்கும் கொலை சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் கடற்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதுடன் கொலைகளும் அதிகரித்துள்ளன.

Popular

More like this
Related

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...