சீன அரசுக்கு சொந்தமான சினோபெக், முதலீட்டுச் சபை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது

Date:

சீன அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக், இலங்கையில் சில்லறை எரிபொருள் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BoI) இன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.

முன்னதாக, சினோபெக் இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், சீன நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்க 20 ஆண்டு உரிமம் வழங்கப்படும், மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களில் முதலீடு செய்யவுள்ளது.

சினோபெக் உரிமத்தைப் பெற்ற 45 நாட்களுக்குள் செயற்பாட்டைத் தொடங்க முடியும் என ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை முன்னதாக தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...