ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து புதிய அரசியல் கூட்டணி?

Date:

அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் இணைய 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய கூட்டணி எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என தெரியவருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக உருவாக்கப்படும் இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா செயற்படுவார் என அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கூட்டணியில் இணையவது சம்பந்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த வாரம் சில சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதுடன் மேலும் சில பேச்சுவார்த்தைகள் நாடாளுமன்றத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியுடன் மாத்திரமன்றி, பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் இளம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...