ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து புதிய அரசியல் கூட்டணி?

Date:

அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் இணைய 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய கூட்டணி எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என தெரியவருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக உருவாக்கப்படும் இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா செயற்படுவார் என அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கூட்டணியில் இணையவது சம்பந்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த வாரம் சில சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதுடன் மேலும் சில பேச்சுவார்த்தைகள் நாடாளுமன்றத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியுடன் மாத்திரமன்றி, பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் இளம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...