திரிபோஷாவுக்கு பதிலாக முட்டை வழங்க நடவடிக்கை!

Date:

திரிபோஷ உற்பத்தியை வழமைக்கு கொண்டு வரும் வரையில் 6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு, மாற்று போசனை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிறார்கள் முட்டைகளை அதிகமாக உண்ணுவதால், திரிபோஷவுக்கு மாற்றீடாக முட்டையை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் திரிபோஷ சிறுவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளமை பிரச்சினையாக எழுந்துள்ளது.

மேலதிக ஊட்டச்சத்தாக வழங்கப்பட்ட திரிபோஷவை வழங்க முடியாத நிலை காணப்படுமாயின் அதற்கு நிகரான மாற்றீடு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

குடும்பநல சேவையாளர்கள் என்ற அடிப்படையில், 6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு மீண்டும் திரிபோஷ வழங்கப்படும் வரையில், மாற்றீடாக மாதாந்தம் ஒரு  தொகை முட்டையை வழங்குவதற்கு பரிந்துரைப்பதாகவும் அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...