நைகர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்: ஜனாதிபதி சிறைபிடிப்பு!

Date:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைகரில் திடீரென இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, ஜனாதிபதி முகமது பாசுமை சிறைபிடித்தனர்.

இதனை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஊடாக பாதுகாப்பு தரப்பினர் மக்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆதரவாக தலைநகர் நியாமியில் திரளான மக்கள் வீதிகளில் இறங்கினர்.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்த வீரர்கள் எதிர்ப்பை சமாளிக்க துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

ஆனாலும் நகரம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது. ஆப்பிரிக்க ஒன்றியம், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குறித்த இச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...