புத்தளத்தில் இடம்பெற்ற ‘கடல் சார் மனித கடத்தல் பற்றி விழிப்புணர்வு திட்டம்’ தொடர்பான செயலமர்வு!

Date:

இலங்கையில் கடல் சார் மனித கடத்தல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் திட்டம் தொடர்பான முழு நாள் செயலமர்வொன்று புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள கிராமிய அபிவிருத்தி அமைப்பின் (ஆர்.டி.எப்) கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம்பெற்றது.

சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் சீ.டி.எஸ்.நிறுவனம் ஆகியன இணைந்து இந்நிகழ்வுவை ஏற்பாடு செய்திருந்தன.

இதில் பிரதான வளவாளர்களாக மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றவியல் விசாரணை பிரிவின் அதிகாரிகளான சுகத் அமரசிங்க மற்றும் எஸ்.ஐ.மதூஷான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குனர் இந்திராணி குசுமலதா இந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.

புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...