புத்தளத்தில் இடம்பெற்ற ‘கடல் சார் மனித கடத்தல் பற்றி விழிப்புணர்வு திட்டம்’ தொடர்பான செயலமர்வு!

Date:

இலங்கையில் கடல் சார் மனித கடத்தல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் திட்டம் தொடர்பான முழு நாள் செயலமர்வொன்று புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள கிராமிய அபிவிருத்தி அமைப்பின் (ஆர்.டி.எப்) கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம்பெற்றது.

சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் சீ.டி.எஸ்.நிறுவனம் ஆகியன இணைந்து இந்நிகழ்வுவை ஏற்பாடு செய்திருந்தன.

இதில் பிரதான வளவாளர்களாக மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றவியல் விசாரணை பிரிவின் அதிகாரிகளான சுகத் அமரசிங்க மற்றும் எஸ்.ஐ.மதூஷான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குனர் இந்திராணி குசுமலதா இந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.

புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...