புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தின் பங்களிப்பில் பொலிஸ் கண்காணிப்புக் கூடம் திறந்துவைக்கப்பட்டது!

Date:

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி. சில்வா (DIG வடமேற்கு – வடக்கு) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தினால் (PUTWA) புதுப்பிக்கப்பட்ட பொலிஸ் கண்காணிப்புக் கூடம், புத்தளம் பொலிஸ் நிலையத்திடம் கையளிக்கும்  நிகழ்வு கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை புத்தளம் நகரில் நடைபெற்றது.

இக் கண்காணிப்புக் கூடத்தை பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அவர்களுடன் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி HQI குலதுங்க திறந்து வைத்தனர்.

மேலும் இந்த திறப்பு விழாவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் SSP கே.எஸ்.கே. ரூபசிங்க அவர்களும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டார்.

இதன்போது, வர்த்தக வணிக நடவடிக்கைகளுடன் சமூக ரீதியான நடவடிக்கைகளில் புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தினால் வழங்கும் பங்களிப்பை பாராட்டிய   நாலக டி சில்வா அவர்கள், புத்தளம் நகரத்தின் காவல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அதன் அழகை பராமரிப்பதிலும் வர்த்தக சமூகத்தின் பங்களிப்பை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வுக்கு புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்க தலைவர் வை.எம் நிஸ்தாத், செயலாளர் இஹ்ஸாஸ் இல்யாஸ் உட்பட நிருவாக உறுப்பினர்களும் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...