போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் பொலிஸார்: சட்ட நடவடிக்கை எடுக்க விசேட வேலைத்திட்டம்

Date:

போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமையான இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் பொலிஸாருக்கு மத்தியில் இருக்கலாம் என்பதால், இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.

கடமையில் ஈடுபடும் போது கைது செய்யப்படும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் ஏற்படும் தொடர்புகளால், இந்த பொலிஸ் அதிகாரிகள் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் போதைப் பொருளை பரீட்சித்து பார்ப்பதால், பொலிஸ் அதிகாரிகள் அதற்கு அடிமையாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் பொலிஸ் திணைக்களத்தில் புதிதாக இணைந்துக்கொண்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மத்தியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் சுமார் 500 பேர் வரை இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...