மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் நடுவராக, பலஸ்தீனப் பெண்!

Date:

நடைபெறவிருக்கும் மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளில் நடுவராக முதல் முறையாக பலஸ்தீனைச் சேர்ந்த ஹெபா சாதியா என்ற பெண்ணை உலகக் கால்பந்து சம்மேளனமான பிஃபா தேர்வு செய்துள்ளது.

இவர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20 வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை சுற்றுத் தொடரில் நடுவராக பங்கேற்கிறார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் ஒன்பதாவது மகளிர் உலகக் கோப்பை சுற்றுப் போட்டிகள், இரு நாடுகள் இணைந்து நடத்தும் முதல் போட்டி என்பதோடு 32 நாடுகள் பங்கு கொள்ளும் முதல் போட்டியுமாகும்.

34 வயதான ஹெபா சாதியா பலஸ்தீனத்தில் பிறந்தவர். இவர் முன்னாள் பலஸ்தீனிய கால்பந்து வீரராக இருந்து நடுவராக மாறியவர்.

அவர் 26 வயதில் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமுக்கு குடிபெயர்ந்தார். ஐரோப்பாவில் உரிமம் பெற்ற பிபா நடுவராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

இஸ்ரேலியப் படைகள் பலஸ்தீனத்தில் விளையாட்டு வசதிகளுக்கு பாதிப்பை பல ஆண்டுகளாகவே ஏற்படுத்தி வந்திருக்கும் நிலையிலேயே சாதியா சாதித்திருக்கிறார்.

உள்ளூர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடுவதற்கும் காசாவில் இருந்து கால்பந்து வீரர்கள் இஸ்ரேல் வழியாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்குள் நுழைவதற்கும் இஸ்ரேல் பயண அனுமதிகளை மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...