சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக மக்கள் இன்று புதன்கிழமை (05) கையெழுத்து வேட்டையும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுத்தனர்.
மல்வத்தை சந்தியில் மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக காலை முதல் மல்வத்தை சந்தியில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் வளத்தாப்பிட்டி மல்லிகைத்தீவு மல்வத்தை புதுநகர் கனபதிபுரம் 26ம்குளனி சடயந்தலாவ போன்ற பிரதேச மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மஜீட்புரம் பள்ளிவாசல்களிலும் நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
அதற்கமைய காலை பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் இணைந்த ஆர்ப்பாட்டமும் கையெழுத்து வேட்டையும் ஆரம்பித்துள்ளது.