மனித உரிமை மீறல்களுக்காக ஐந்து நாடுகளுக்கு தடைவிதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்

Date:

மனித உரிமை மீறல்களுக்காக ரஸ்யா, உக்ரைன் உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது தடைகள் விதிக்கப்பட்டடுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஆப்கானிஸ்தான், தென்சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ரஸ்யா, உக்ரைன் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளை சேர்ந்த 18 பேருக்கும் 5 நிறுவனங்களுக்கும் எதிராகவும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் பாலியல் மற்றும் பாலியல் ரீதியிலான வன்முறைகளுக்கு எதிராக தடைவிதிக்கபட்ட அறுவரில் தலிபான்களின் கல்வி மற்றும் நீதி அமைச்சர்களும் ஆப்பாகானிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் நீதியரசரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, ரஸ்யாவை சேர்ந்த 12 பேருக்கு எதிராகவும் தடைவிதிக்கப்பட்டுள்ளன.

ரஸ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க கொத்து குண்டுகளை உக்ரைன் பயன்படுத்துவதை வெள்ளை மாளிகை அண்மையில் உறுதிசெய்திருந்தது.

ரஸ்ய படைகளால் பாதுகாக்கப்படுபவை மீதும் அவற்றின் நடவடிக்கைகள் மீதும் இந்த குண்டுகள் திறம்பட பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிருபை தெரிவித்துள்ளார்.

கொத்து குண்டு என்பது பலதரப்பட்ட குண்டுகளால் இணைந்துள்ளதுடன், அது வெடிக்கும் போது பாரிய பரப்புக்கு சேதங்களை ஏற்படுத்தி வெடிக்கும் வல்லமை கொண்டது.

இந்த குண்டுகளால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு நூற்றுக்கும் அதிகமான நாடுகள் அதனை தடைசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யுக்ரைனின் ஆயுத பலத்தை அதிகரிக்கும் நோக்கில் கொத்துக்குண்டுகளை அந்நாட்டுக்கு வழங்க அமெரிக்க இணங்கியிருந்தது.

இந்த குண்டுகளை ரஸ்ய வீரர்களின் செரிவை குறைக்கும் விதமாக பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் உறுதியளித்திருந்தது.

மேலும், கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்த போது பொது மக்கள் வாழும் பகுதிகள் உள்ளிட்டவற்றை ரஸ்யா கொத்து குண்டுகளை வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...