மாதிவெல குடியிருப்பில் முன்னாள் எம்பிக்கள் தங்கியிருப்பதால் தற்போதைய எம்.பி க்கள் ஐவருக்கு இடமில்லை

Date:

மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் சுமார் பத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளைப் பயன்படுத்த அவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தங்களுடைய சொந்த பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை பெற்று தமது அன்பான முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளதாகபாராளுமன்ற வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே மதிவெல பாராளுமன்ற உறுப்பினர் வீடுகளை பயன்படுத்த முடியும் என பாராளுமன்ற தலைவர்கள் சகல உறுப்பினர்களுக்கும் அண்மையில் நினைவூட்டியுள்ளனர்.

மாதிவெல உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் கிட்டத்தட்ட 110 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மடிவெல எம்.பி.யின் வீட்டுத் தொகுதி முழுவதுமாக நிரம்பியிருப்பதால் ஐந்து எம்.பி.க்களுக்கு வீடுகளை வழங்க முடியாதுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இவ்வாறு வீட்டு வசதி கோரியுள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளி மாகாணங்களில் வசிப்பவர்கள்.

இதேவேளை, எரிபொருள் விலை உயர்வினால் வெளி மாகாணங்களில் வசிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற வாரத்தின் போதும் ஏனைய பல நாட்களிலும் கொழும்பில் தங்கியிருப்பதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...