லிபியாவின் தலைநகர் திரிபோலியில் லண்டன் சிறுவர் நல வைத்தியர்களால் குழந்தைகளுக்கு இலவச இருதய நோய் சத்திர சிகிச்சை!

Date:

கடந்த பல வருடங்களாக லிபியாவில் ஆட்சித் தலைவராக இருந்த முகம்மர் கடாபி உடைய மரணத்தைத் தொடர்ந்து லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரங்களின் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இத்தகைய ஓர் சூழ்நிலையில் , சர்வதேச நிவாரண அமைப்புக்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை செய்து வருகின்றார்கள். இந்த வரிசையில் லண்டனை மையமாகக் கொண்டு செயல்படுகின்ற ஒரு சமூக சேவை அமைப்பு நேற்று லிபியாவின் தலைநகரான திரிபோலியில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற குழந்தைகளுக்கான இலவச சத்திர சிகிச்சை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இம் மனிதாபிமான நிகழ்வில் லண்டனில் செயல்படுகின்ற, பணி புரிகின்ற பல நாடுகளையும் சேர்ந்த 10 வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், சிறுவர் நோய் நல நிபுணர்கள் கலந்து கொண்டு இவ் இலவச இருதய நோய் நிவாரண சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

இவ் வைத்திய குழுவில் இலங்கையைச் சேர்ந்த பிரபல சிறுவர் நோய் நிபுணரான Dr. ரயீஸ் முஸ்தபா அவர்களும் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: Dr. ரயீஸ் முஸ்தபா (திரிபோலி நகரில் இருந்து)

Video: 👇 click photo

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...